அரசு ஐ டி ஐ . களில் இலவச தொழிற்பயிற்சி
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அரசு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கை வினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் 01-08-2011 முதல் தொடங்கும் தொழிற்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன . மகளிருக்கான 30 % இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன . 14 வயதுக்கு மேற்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம் . இவர்களுக்கு வயது உச்சவரம்பு கிடையாது .
கல்வி தகுதி :-
எட்டாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி
அனைத்தும் இலவசம் :-
இலவச பயிற்சி தவிர இலவச பேருந்து பயண சலுகை , மற்றும் மாதந்தோறும் கல்வி உதவித் தொகை .
பயிற்சி நிலையங்கள் :-
அம்பத்தூர் , அம்பத்தூர் (மகளிர் ) , வடசென்னை , கிண்டி , கிண்டி (மகளிர் ) , செங்கல் பட்டு , திருவான்மியூர் , வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம் , கடலூர் , கடலூர் (மகளிர் ), உளுந்தூர்பேட்டை , சேலம் , சேலம் (மகளிர் ), மேட்டூர் அணை , ஓசூர் , தருமபுரி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர்,(மகளிர் ), திருப்பூர் , தஞ்சாவூர், நாகபட்டினம் , மதுரை , மதுரை(மகளிர் ), தேனி திண்டுக்கல் ,திண்டுக்கல்(மகளிர் ) , விருதுநகர், பரமக்குடி , இராமநாதபுரம் , காரைக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில், நாகர்கோவில்(மகளிர் ), தூத்துக்குடி , அம்பாசமுத்திரம், தென்காசி, நீடமங்களம், இரானிபேட்டை, திருக்குவளை, தாராபுரம், ஈரோடு, குன்னூர் , திருச்சி , புள்ளம்பாடி (மகளிர் ), அரியலூர், புதுக்கோட்டை , ஆண்டிபட்டி (மகளிர் ), கரூர் (மகளிர் ), நாமக்கல் (மகளிர் ) , ஆண்டிமடம் , பெரம்பலூர், சிவகங்கை , மற்றும் நாகலாபுரம்
மாற்றுதிரனாளிகள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ ரீதியாக தகுதியின் அடிப்படையில் சிலகுரிப்பிட்ட தொழிர்பிரிவுகளில் மட்டும் , சேர்க்கை அனுமதிக்கப்படும். முன்னாள் இராணுவத்தினர் வாரிசுதாரர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள முன்னாள் இராணுவ நல அலுவலகம் மூலமாக அனுப்பவேண்டும் .
விண்ணப்பிப்பது எப்படி ?
விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கைஏட்டினை அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் ஐம்பது ரூபாயை செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம் . ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற்பிரிவில் சேர விரும்புவோர் ஒவ்வொரு பிரிவிற்கும் தனி தனி விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தினை சேர விரும்பும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வருக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் .
கடைசி நாள் :- 21-06-2011
நன்றி : புதிய தலைமுறை 9-ஜூன் -2011